ஏனைய உயிர் உயர்திணையில் விளியேலா எனல்
 

127.

ஏனை உயிரே உயர்திணை மருங்கில்
தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்.
 

என் - எனின்,  வேண்டாகூறி  வேண்டியது முடித்தலை உணர்த்தல்
நுதலிற்று.

என்னை,  வேண்டா  கூறியவாறு  எனின்  அவைதாம்  இ உ ஐ ஓ
என்புழி  இந்நான்கு  ஈறும் விளியேற்கும் ஒழிந்த உயிரீறு   விளியேலா
என்பது   பெற்றமையின்  என்பது.   இனி  வேண்டியது   முடித்தவாறு
என்னை  யெனின், ஒழிந்த உயிரீறு  வேற்றுமை ஏலா என்று   இன்னும்
மேற் சொல்லிய உயிரீறு விளியேற்கும் என்றமையின்.

(இ - ள்.) மேற்கூறிய  நான்கு  உயிரீறே யன்றி  ஒழிந்த உயிரீறுகள்
உயர்திணைப்  பெயரிடத்துத்   தாம்  விளித்தலைக்   கொள்ளா என்று
சொல்லுவர் புலவர், (எ - று.)

இவ்விதி  மேலே   பெற்றாமன்றோ   எனின்,  மேற்  கூறியவாறன்றி
விளியேற்கும் என்பது கருத்தெனக் கொள்க.

கணி -  கணியே  என இகரஈறு ஏகாரம் பெற்றது. பிறவும் வந்தவழிக்
கண்டு கொள்க.                                            (7)

******************************************************************