முறைப்பெயரில் ‘ஐ’ ஈறு ஆ வாகவும்வருதல்
 

129.

முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.
 

என் - எனின்,  மேற்சிறப்புவிதி   குத்தலை   நுதலிற்று ;  முறைப்
பெயரிடத்து  ஐகாரவீறு  ஆயாய் விளியுருபேற்று வருதலே அன்றி ‘ஆ’
வாயும் விளியேற்கின்றமையின்.

(இ - ள்.) முறைப்   பெயரிடத்து   ஐ  என்னும்  ஈறு   ஆயொடு
வருதலேயன்றி ஆவொடு வருதற்கு உரியனவும் உள, (எ - று.)

(எ - டு.) அன்னை  -  அன்னா  என்றும்,  அத்தை  -  அத்தா
என்றும் வரும்.

உம்மை எதிர்மறை. அதனால் ஆவாதலே பெரும்பான்மைத்து.

மற்றிவை    விரவுப்   பெயர்களை   உயர்திணைப்  பெயர்களோடு
மாட்டெறியும்  ஆதலானும்   அம்மாட்டேற்றிற்கு   ஏற்ப உயர்திணைப்
பெயர்களுள்   இவ்வாறு   விளியேற்பன   இன்மையானும்   ஆண்டுக்
கூறற்பாலதனை ஈண்டுக் கூறியது எனக் கொள்க.                 (9)

******************************************************************