என் - எனின், மேற்சிறப்புவிதி குத்தலை நுதலிற்று ; முறைப் பெயரிடத்து ஐகாரவீறு ஆயாய் விளியுருபேற்று வருதலே அன்றி ‘ஆ’ வாயும் விளியேற்கின்றமையின். (இ - ள்.) முறைப் பெயரிடத்து ஐ என்னும் ஈறு ஆயொடு வருதலேயன்றி ஆவொடு வருதற்கு உரியனவும் உள, (எ - று.) (எ - டு.) அன்னை - அன்னா என்றும், அத்தை - அத்தா என்றும் வரும். உம்மை எதிர்மறை. அதனால் ஆவாதலே பெரும்பான்மைத்து. மற்றிவை விரவுப் பெயர்களை உயர்திணைப் பெயர்களோடு மாட்டெறியும் ஆதலானும் அம்மாட்டேற்றிற்கு ஏற்ப உயர்திணைப் பெயர்களுள் இவ்வாறு விளியேற்பன இன்மையானும் ஆண்டுக் கூறற்பாலதனை ஈண்டுக் கூறியது எனக் கொள்க. (9) |