என் - எனின், உயர்திணைக்கண் உயிரீறு விளியேற்பன இவை என்பது உணர்த்தி இனி இவ்வுயர்திணைக்கண் புள்ளி ஈறு விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ன ர ல ள என்று சொல்லப்பட்ட அந் நான்கு ஈற்றுப் பெயரும் என்று சொல்லுப ஆசிரியன், புள்ளியீற்றினை உடைய விளித்தலைக்கொள்ளும் உயர்திணைப் பெயராவன, (எ - று.) புள்ளியீற்றுள் இவை கொள்ளும் எனவே ஒழிந்தன விளிகொள்ளா என்பதூஉம் பெற்றாம். (எ - டு.) பொருந, பாண எனவும் எல்லாரும் எனவும் இவை முதலாயின விளி ஏலாதன எனக்கொள்க. (11) |