எய்தியதன்மேற் சிறப்பு விதி
 

142.

தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.
 

என்  -  எனின்,  இஃது, எய்தியதன்  மேல் சிறப்புவிதி   வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய   இரண்டு   ஈறும்    தொழிற்   பெயர்க்கு
ஈறாய்வரின் மேற்கூறிய  ஈரோடு  ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று
என்று சொல்லுவார் *விளங்கிய அறிவினையுடையார், (எ - று.)

(எ - டு.) உண்டார்  -  உண்டீரே,  தின்றார் - தின்றீரே எனவரும்.
அர் ஈறு வந்தவழிக் கண்டு கொள்க.

வழுக்கின்று என்றதனால், தொழிற்பெயரல்லனவும்  ஈரொடு  ஏகாரம்
பெறுதல் கொள்க.

(எ - டு.) நம்பீரே, கணியீரே எனவரும்.                   (22)

******************************************************************