இதுவுமது
 

146.

நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்
றம்முறை இரண்டும் அவற்றியல் பியலும்.
 

என் - எனின், இதுவும் விளியேலாதன கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  நும்  என்னும் சொல்லினது  திரிபாகிய  நீயிர்  என்னும்
சொல்லும்,   வினாப்பொருளை   உணர  நின்ற   சொல்லாகிய  யாவர்
என்னும்  சொல்லும்   என்று  சொல்லப்பட்ட அம்  முறையினையுடைய
சொல்   இரண்டும்   மேல்   விளியேலாது   என்று    சொல்லப்பட்ட
சுட்டுப்பெயர் போலத் தாமும் விளியேலா, (எ - று.)

நீயிர்   என்பது  இர்  ஈறாகலின்,   ஈண்டு   எய்திய  தின்மையின்
விலக்கல்  வேண்டா  எனின்,  ‘ஏனைப்புள்ளி’  (132)  என்பதனுள் இர்
ஈறுங் கொள்ளப்பட்டமையின் வேண்டும் என்பது.                (26)

******************************************************************