இதுவுமது
 

149.

வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆள்என் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

என்   -   எனின்,  அவ்விரண்டீற்றுள்  ளகார  ஈற்றிற்கு  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ- ள்.) வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும்  ஆள்
என்னும் இறுதி விளிக்குமிடத்து ஆயாய் விளியேற்கும், (எ -று.)

(எ - டு.) உண்டாள்  -  உண்டாய்  எனவும்,  கரியாள்  - கரியாள்
எனவும் வரும்.                                            (29)

******************************************************************