என் - எனின், இஃது ளகார ஈற்றுள் விளியேலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ளகார வீற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவள், இவள், உவள் என்னும் பெயர்களும், வினாப்பொருண்மையுடைய யாவள் என்றும் பெயரும், னகார ஈற்றுச் சுட்டெழுத்து முதற்பெயரும் வினாவின் பெயரும் போல விளியேலா என்று சொல்லுவர் புலவர் (எ - று.) (31) |