விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்து ஒலிக்கும்
எனல்
 

155.உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
1அளபிறந் தனவே விரிக்குங் காலைச்
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.
 

என்   -   எனின்,  மேற்கூறிய  மூவகைப்  பெயர்க்கும்  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. 

(இ - ள்.)  மேல்    விளியேற்றற்குதியனவாக   எடுத்தோதப்பட்ட எல்லாப் பெயர்களும்  தத்தம்  மாத்திரையின்  மிக்கிசைக்கும் விளிக்குங் காலத்து;  யாண்டுமோ  எனின், அற்றன்று,  சேய்மைக்கண்  இசைக்கும் வழக்கிடத்து, (எ - று.)

(எ - டு.)நம்பீஇ, சாத்தாஅ எனவரும்.

வரையறை   இன்மையின் வேண்டியவாறு அளபெழும் எனக்கொள்க.
ஆயின்,   உயிர்    பன்னிரண்டு   மாத்திரையும்,  ஒற்றுப்  பதினொரு
மாத்திரையும் எனக் கொள்க.                                (35)


1. ‘அளவிறந்தனவே’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.

******************************************************************