உயர்திணைப் பெயருள் விளி ஏலாதன
 

157.தநநு எஎன அவைமுத லாகித்
தன்மை குறித்த னளரவெ னிறுதியும்
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.
 

என்   -   எனின்  இதுவும்  உயர்திணைப்பெயருள் விளியேலாதன
கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) த, ந, நு, எ என்று  சால்லப்பட்ட  அவ்வெழுத்துக்களை
முதலாகவுடையவாகிய,  ஓர் தொடர்ச்சித்  தன்மையைக்  குறித்த ன, ள,
ர  என்னும்   ஈற்றெழுத்தினையுடைய   பெயர்களும்  அத்தன்மையான
பிறபெயர்களுமாயுள்ள   பெயராகிய  நிலைமையையுடையசொற்கள்வரின்,
மேல்    விளியேற்கும்    எனப்பட்ட    பெயரொடு     விளிகோடல்
இல்லாமையை வேண்டும் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) தமன், தமள், தமர்; நமன்,  நமள்,  நமர்;  நுமன், நுமள்,
நுமர்;  எமன்,   எமள்,    எமர்;   எனவும்,   பிறவும்   என்றதனான்,
மற்றையான், மற்றையாள்,  மற்றையார் ;  பிறன், பிறள், பிறர் ;  எனவும்
வரும்.

இவற்றை  உயர்திணைப்  பெயர்களோடு  கூறாது  ஈண்டுக் கூறியது
என்னை   எனின்,  இவை  ஓரினத்துட்பட்டு    இயைந்து  வருதலான்
ஈண்டுப் போதந்து உடன் கூறினார் எனக்கொள்க.               (37)

விளிமரபு முற்றும்.

******************************************************************