நால்வகைச் சொற்களில் சிறப்புடையன இவை எனல்
 

161.1சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.
 

என் -  எனின்,  மேற்  பொருளுணர்ந்து மெனப்பட்ட சொல்லிற்குப்
பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  சொல்லென்று       சிறப்பித்துச்     சொல்லப்படுவன
பெயர்ச்சொல்லென்றும்.   வினைச்சொல்   லென்றும்  அவை  யிரண்டு
மென்று சொல்லுப இலக்கணம் அறிந்த ஆசிரியர், (எ - று.)

பெயர்ச்சொல்  பொருளை  உணர்த்துதலின்     முற்  கூறப்பட்டது.
வினைபொருளது  புடைபெயர்ச்சியாகிய   தொழிலினை   உணர்த்தலின்
சிறப்பினவல்ல என்று பிற்கூறப்பட்டது.

என சிறப்பின்கண் வந்தது.                               (4)


1.‘சொல்லெனப்படுவ’ என்பதும் பாடம்.

******************************************************************