பெயரது இலக்கணம்
 

163.அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும்

1அம்மூ உருபின தோன்ற லாறே.
 

என்  -  எனின்,  நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும்
முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)   மேற்   சொல்லப்பட்ட    நான்கு     சொல்லுள்ளும்
பெயர்ச்சொல்லென்று     சொல்லப்படுவனவற்றை     ஆராயுங்காலத்து
உயர்திணைக்கு    உரிமையும்,     அவ்விரு     திணைக்கும்    ஒத்த
உரிமையுடையனவும்   என   அம்மூன்று   கூற்றன   அவை  தோன்று
நெறிக்கண், (எ - று.)

அப்பெயர் பெயர்  ;  அம்முறைமுறை  ; அத்தொகை தொகை  என
உணர்க.                                                  (6)


1.‘அம்மூவுருவின’ என்பது நச்சினார்க்கினியர் பாடம்.

******************************************************************