இதுவுமது
 

167.எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.
 

என்  -   எனின்,   இதுவும்   உயர்திணை   யொருசார்பெயர்களை
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  எல்லாரும்   என்று    சொல்லப்படுகின்ற  படர்க்கைப்
பெயர்ச்சொல்லும்,   எல்லீரும்  என்று  சொல்லப்படுகின்ற முன்னிலைப்
பெயர்ச்சொல்லும்,   பெண்மை    என்னும்   சொல்லை  முன்னெடுத்த
பெண்மகன்    என்னும்    பெயர்ச்சொல்லும்    இவை      மூன்றும்
அவைபோலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், (எ -று.)

நாணுவரை     யிறந்தாள்   தன்மையளாகிப்   புறத்துப்     போய்
விளையாடும்   பெண்மகளைப்   பெண்மகன்   என்பது    முற்காலத்து
வழக்கம்.    அதனை   இப்பொழுது    மாறோக்கத்தார்   வழங்குவர்.
மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு.                    (10)

******************************************************************