உயர்திணைப் பெயர்க்குப் புறனடை
 

169.அன்ன பிறவும் உயர்திணை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

என்   -   எனில்,  இதுவும்  உயர்திணைப்  பெயருக்குப்  புறனடை
யுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய    அத்தன்மை     பிறவுமாயுள்ள   உயர்
திணையிடத்துப்  பன்மையும்   ஒருமையுமாகிய  பால்களை  அறியவந்த
எல்லாப் பெயர்களும் அவ் வுயர்திணைக்குரிய பெயர்களாம், (எ - று.)

(எ - டு.)ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான்,  பிறன்,
பிறள்,  பிறர்,  தமன், தமள், தமர், நுமன்,   நுமள், நுமர்,  மற்றையான்,
மற்றையாள், மற்றையார் எனவரும். பிறவும் அன்ன.              (12)

******************************************************************