வினா செப்பாகவும் வரும் எனல்
 

14.

வினாவும் செப்பே வினாவெதிர் வரினே.
 

என் - எனின் செப்பு வழுவமைதி கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  வினாவென்று     சொல்லப்படுகின்றதும்    ஒரோவழிச்
செப்பென்று  சொல்லப்படும்;  ஒருவன்   ஒன்றனை   வினாவத் தானும்
அதற்கு  எதிர் ஒன்றனை வினவி  இறைப்பொருள் படுத்துமே  யெனின்
(எ - று.)

(எ - டு.) சாத்தா சோறு உண்ணாயோ? என்றாற்கு  உண்ணேனோ?

இது  வினா  வழுவமைதியன்றோ   எனின்?  பிறிதோர்  வினாவந்து
வினாப்  பொருள்  பயவாது  செப்புப்பொருள்  பயப்பநிற்றலின்,  செப்பு
வழுவமைதியென அடக்கினார்.                              (14)

******************************************************************