அஃறிணை இயற்பெயர்
 

172.கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி உடைய பலவறி சொற்கே.
 

என்   -    எனின்,    இதுவும்    பாலறிய   வரும்   அஃறிணை
யொருசார்ப்பெயர்களையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  கள்    என்னும்     வாய்பாட்டோடு      பொருந்தும்
அவ்வஃறிணையியற்  பெயர்கள்  பலவறி   சொல்லாதற்குக்  கொள்ளும்
இடமுடைய, (எ - று.)

கள்ளொடு   சிவணின் இயற்பெயர் பலவறி சொல்லாகக் கொள்ளுமிட
முடைய  எனவே, கள்ளொடு சிவணாத பெயர்கள் பலவறி  சொல்லாகக்
கொள்ளப்படாத  ;  ஒருமைக்கும்   பன்மைக்கும்   பொதுவாய்  நிற்கும்
என்றவாறு.

(எ - டு.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை யுணர  நின்றன ;  நாய்
ஆ  எனக்  கள்ளொடு  சிவணாமையிற்  பொதுவாய்  நின்றன   எனக்
கொள்க.                                                 (15)

******************************************************************