என் - எனின், மேற் புறனடையுள் பால் அறிய வருவனவற்றோடு ஒன்றாக ஓதப்பட்ட இயற்பெயர்கள் பாலறிய வருமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) அஃறிணையிடத்து ஒருமையும் பன்மையுமாகிய பால்கள் எப்பொழுது தெரிவதெனின் பால் காட்டும் வினையொடு வரும்பொழுது, (எ - று.) (எ - டு.) ஆ வந்தது, ஆ வந்தன எனவும் வினையால் பாலறிய வந்தவாறு கண்டுகொள்க. (17) |