என் - எனின், மேல் விரித்தவற்றுள் பெண்மைப் பெயரெல்லாவற்றையும் தொகுத்துத் திணைக்கு உரியவாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) மேல் விரித்தோதினவற்றுள் பெண்மையைக் கருதின எல்லாப் பெயரும் அஃறிணையுள் பெண்ணொன்றற்கும் உயர்திணையுள் ஒருத்திக்கும் நிற்றல் பொருந்தின, (எ - று.) பெண்மை சுட்டிய பெயர் பெண்மை இயற்பெயர் எனவும், பெண்மைச் சினைப்பெயர் எனவும், பெண்மைச் சினைமுதற்பெயர் எனவும், பெண்மை முறைப்பெயர் எனபும் நான்கு வகைப்படும். (இ - ள்.) பெண்மையியற்பெயர் - சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவரும். பெண்மைச் சினைப்பெயர் - முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவரும். குறளி என்பதும் அப்பாற்படும். பெண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றி வந்தது, முடக் கொற்றி வந்தாள் எனவரும். பெண்மை முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள் எனவரும், ஆய் என்பதும் அது. யாய் என்பதோ எனின், தன்மையோடு அடுத்தமையின் முறைப்பெயரேனும் உயர்திணை எனப்படும். (26) ஆண்மை சுட்டிய பெயர் |