என் - எனின், தான் என்னும் சொல் திணைக்குரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) தான் என்னும் சொல் இருதிணை ஒருமைக்கும் உரித்து, (எ - று.) (எ - டு.) தான் வந்தது, தான் வந்தான், தான் வந்தாள் எனவரும். வாளாதே ஒருமை என்றமையின் பெண்பால் மேலும், ஆண்பால் மேலும் கொள்க. (31) |