என் - எனின், எல்லாம் என்னும் சொல் திணைக்குரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) எல்லாம் என்று சொல்லப்படும் பெயராகிய நிலைமையையுடைய சொல் இருதிணைப் பன்மையிடத்தையும் கருதிய நிலைமைத்தாகும், (எ - று.) (இ - ள்.) எல்லாம் வந்தார், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தன, எல்லாம் வந்தேம் எனவரும். வாளா பன்மை என்றமையின் இரண்டிடத்தும் ஆண் பன்மையும் பெண் பன்மையும் கொள்க. (32)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் தெய்வச்சிலையார். |