என் - எனின், நீ என்னும் சொல் பாற்குரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) இவ்விரண்டனுள்ளும் நீ என்னும் சொல் இருதிணை முன்னிலை ஒருமைக்குரித்தாம், (எ - று.) (எ - டு.) நீ வந்தாய் என வரும். இது இருபாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறிணைக்கண்ணும் பெண் ஒருமைக்கண்ணும் ஆண் ஒருமைக்கண்ணும் கொள்க, (35)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக் கொள்வார் தெய்வச்சிலையார். |