என் - எனின், இஃது ஒருவர் என்னும் சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) முதற்கூறிய ஒருவர் என்னும் சொல்லினது சொல் முடியுந்தன்மையைக் கருதில் தான் காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச் சொல்லொடு முடியாது ஒருவர் என ரகர ஈற்றதாய் நின்ற அச்சொல் தன்மைக்கு ஏற்பப் பன்மைச்சொல் கொண்டு முடியும், (எ - று.) (எ - டு.) ஒருவர் வந்தார் எனவரும். இதுவும் ஓர் பால்பற்றிய மரபு வழுவமைதி எனக் கொள்க. (38) |