என் - எனின், இது பெயரீறு செய்யுளுள் திரியும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆகாரம் ஓகாரமாகி நிற்கும் பெயரும் உள. அவ்விடங்களை அறிக செய்யுளிடத்து, (எ - று.) (எ - டு.) வில்லோன் காலன கழலே எனவும், தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே எனவும் வரும். ஆயிடனறிதல் என்றதனால் ஆகாரமாதற்கு ஏலாத வழியே ஓகாரம் ஆவது இயல்பு எனக் கொள்க. இனிக் கிழவோன் என்பது ஆகாரமாக வழக்கின்மையின் அது செய்யுள் விகாரம் அன்று ; இயல்பாகிய ஈறு எனக் கொள்க. இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க, (41) |