செய்யுட்கண் வரும் ஆகார ஈறு ஓகாரம் ஆதல்
 
   

198.

ஆஓ ஆகும் பெயருமா ருளவே
ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே.
 

என் - எனின்,    இது   பெயரீறு   செய்யுளுள்  திரியும்   என்பது
உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)  ஆகாரம்    ஓகாரமாகி    நிற்கும்   பெயரும்    உள.
அவ்விடங்களை அறிக செய்யுளிடத்து, (எ - று.)
  

(எ - டு.) வில்லோன்   காலன   கழலே  எனவும்,   தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே எனவும் வரும்.
  

ஆயிடனறிதல் என்றதனால் ஆகாரமாதற்கு ஏலாத வழியே  ஓகாரம்
ஆவது இயல்பு எனக் கொள்க.
  

இனிக்  கிழவோன்   என்பது  ஆகாரமாக  வழக்கின்மையின்  அது
செய்யுள் விகாரம் அன்று ; இயல்பாகிய ஈறு எனக் கொள்க.
  

இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க,           (41)

******************************************************************