என் - எனின், மேல் தொகை கூறப்பட்ட காலத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் கூறி அதுதான் வினைக்குறிப்பிற்கும் வினைச் சொற்கும் உண்டு என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப் படுகின்ற அம்முக்காலமும் வினைக்குறிப்பொடும் கொள்ளப்படும் உண்மை நிலையினையுடைய அவை தோன்றுமிடத்து, (எ - று.) இறப்பு நிகழ்வு எதிர்வு என்பன பெயர் முறை கிடந்த முறையே. (எ - டு.) கரியன் செய்யன் என்பன. இவை ஆசிரியற்கே கால் புலப்பட நின்றமையின் மேலைச் சூத்திரத்து அடங்காது என்று வேறு கூறப்பட்டது என்பது. மெய்ந்நிலை என்பது வினைக்குறிப்புக் காலத்தைத் தெற்றென விளக்கிக் காட்டாமையான் வினையல்ல என்று கருதினும் கருதற்க; இதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது, எ - று. (3) |