வினைச்சொற்களின் பாகுபாடு
 

204.குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் 
அம்மூ வுருவின தோன்ற லாறே.

 

என் - எனின், வினைச்சொற்களது  பாகுபாடு  கூறுதல்   நுதலிற்று.

(இ - ள்.)  குறிப்பு  வினைத்  தன்மையானும்,  தெரிநிலை வினைத்
தன்மையானும்,  முறைமைப்படத்   தோன்றிக்  காலத்தொடு  வருகின்ற
வினைச்சொற்கள்  எல்லாம்  உயர்திணைக்கு உரியனவும் அஃறிணைக்கு
உரியனவும்   அவ்விரு   திணைக்கும்   ஒன்று   போன்ற    உரிமை
உடையனவும்  என  அம் மூன்று கூற்றை உடைய தோன்று நெறிக்கண்,
(எ - று.)
  

மேல் ‘குறிப்பொடுங்கொள்ளும்’   (சொல்   -203)   எனக்  குறிப்பு
இயைபுபற்றி நிற்றலிற் குறிப்பு முன் கூறப்பட்டது.
  

வினைக்  குறிப்பிற்கும்  காலம்  உண்டே  என்பது  வலியுறுத்தற்குப்
பின்னும் காலமொடு தோன்றும் என உடன் கூறப்பட்டது.          (4)

******************************************************************