என் - எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கடதற என்று சொல்லப்பட்ட அந்நான்கு ஒற்றினையும் ஊர்ந்த குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நான்கும் என் ஏன் அல் என்னும் மூன்று ஈற்றுச்சொல்லும் எனச் சொல்ல வருகின்ற அவ்வேழு சொல்லும் தன்மைப் பன்மைச் சொல்போலச் சொல்லுவான் தன்னோடு பிறன் வினையையும் உணர்த்தாது தன் வினையையே உணர்த்தும் தன்மைச் சொல்லாம், (எ - று.) ஒடு, எண்ணொடு. இவற்றுள் முன்னைய நான்கும் எதிர்காலம் ஒன்றுமே பற்றிவரும். (இ - ள்.) உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு என வரும். இவற்றுள் தகர உரகம்: “கழிந்து பொழிந்தென வான்கண் மாறினுந், தொல்லது விளைந்தென நிலம் வளங்கரப்பினும்” 1என்னும் புறப்பாட்டினுள் பொழிந்து எனவும், விளைந்து எனவும் இறந்தகாலம் பற்றி வந்தன. சிறுபான்மை நிகழ்காலமும் உண்டேனும் அறிந்து கொள்க. இனிக் ககர உகரத்திற்கு : “அழா அற்கோ வினியே நோய்நொந்துறைவி”2 என்னும் குறுந்தொகைப் பாட்டினுள் அழுது என்னும் உடன்பாட்டிற்கு அழாஅற்கு எனஎதிர்மறை வந்தது. ஒழிந்த எதிர்மறை வாய்பாடும் உளவேல் அறிக. இனி என் ஏன் என்பன இரண்டு ஈறும் முக்காலத்தும் உடன்பாட்டினும் மறையினும் வரும் எனக் கண்டு கொள்க.. (எ - டு.) உண்டனென், உண்டிலென்; உண்ணாநின்றனென், உண்கின்றனென்; உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பென்,உ உண்குவென், உண்ணலென் எனவரும். இவை என். இனி ஏன் ; உண்டேன், உண்டிலேன்; உண்ணாநின்றேன், உண்கின்றேன்; உண்ணாநின்றிலேன், உண்கின்றிலேன்; உண்பேன், உண்குவேன், உண்ணேன் எனவரும். உண்டனன், உண்டேனல்லேன் எனவரும் மறைவிகற்பமும் அறிக. இவ்விரண்டீறும் மூன்று காலத்தும் வருதலால் முன் வைக்கற்பாற்று எனின், முன் சூத்திரத்து கடதறக்கள் கடைக்கண் நின்ற அதிகாரம் பற்றி அவற்றை முற்கூறினான் எனவு......... அல்ஈறு உண்பல், தின்பல் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலம் பற்றியும் வரும். ஒழிவல், தவிர்வல் எனச் சில வினைக்கண் மறைவாய்பாடும் அறிக. அல்லாதவற்றிற்கும் உண்ணா தொழிவல் என்றா.........வாய்பாடு தானே மறையாய்ச் சொல்லுமாறு அறிக. (6)
1. புறம். 203 2.குறுந். 192 |