யார் என்பது உயர்திணை முப்பாற்கும் உரித்தாதல்
 
  

213.

யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே.
 

என் - எனின்,  உயர்திணைத் தெரிநிலை வினை  உணர்த்தி, அதன்
வினைக்குறிப்பினுள் ஒன்றனை உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.)யார்  என்று சொல்லப்படுகின்ற வினாப்பொருளை உணர
நின்ற  சொல்  மேற்சொல்லப்பட்ட  உயர் திணையிடத்து  முப்பாற்கும்
உரித்து, (எ - று.)
  

(எ - டு.) யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும்.

மேல்    வினைக்குறிப்புக் கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன
போலாது இஃது ஈறுதிரியாது தானொன்றே  மூன்றுபாற்கும்  உரித்தாயின
மையின் வேறு கூறினார் எனக்கொள்க.                        (13)

******************************************************************