என் - எனின், அவ்விருபத்து மூன்று ஈற்றுள்ளும் மூன்றற்குச் செய்யுளகத்துப் பிறப்பதோர் திரிபு கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) பால் அறியப்படும் மரபினையுடை அம்மூன்றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாம் செய்யுளிடத்து, (எ - று.) அம்மூன்றாவன, மேல் ‘ஆ ஓ ஆகும்’ என்றமையால் ஆன், ஆள், ஆர் எனக் கொள்க. (இ - ள்.) “வினவி நிற்றந்தோனே”, “நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே”, “சென்றோ ரன்பிலர் தோழி” எனவரும். இம் மூன்றும் படுத்தலோசையால் தொழிற்பெயராயவழி ஆவோவாதல் பெயரியலுட் 1கொள்ளப்படும். (14)
1. பெயரியல் - 41ஆம் நூற்பா. |