ஆய்என் கிளவியிலுள்ள ஆகார ஈறும் ஓகாரமாகும் எனல்
 

215.

ஆயென் கிளவியும் 2அவற்றோ ரன்ன.
 

என் - எனின்,   இஃது  மேலதன்  முடிபு  முடிதலுடையது  பிறதும்
உண்டென்பதும் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.) ஆய்  என்னும்  ஈற்றுச்  சொல்லும் மேற்சொல்லப் பட்ட
மூன்றீற்றினோடும் ஆகாரம் ஓகாரமாதல் கொள்ளப்படும், (எ - று.)
  

(எ - டு.) “வந்தாய்  மன்ற  தெண்கடற்  சேர்ப்ப”  எனவரும்  

இது    விரவு  வினையுள்   உள்ள  தாகலான்,  ஈண்டுக்  கூறியது
என்னையெனின்,     விரவே      எனினும்     இவ்வாறு    திரிவது
உயர்திணையின்மேல்      வந்ததாகலானும்,      ஆ    ஓ    ஆதல்
அதிகாரப்பட்டமையானும்  எனக்கொள்க.                      (15)


1.‘அவற்றொடு   கொள்ளும்’   என்பது   பிற   உரையாசிரியர்கள்
கொண்ட  பாடம்.  சில  ஏடுகளில் கல்லாடருக்கும்  இதுவே பாடமாகக்
காணப்படுகின்றது.
  

******************************************************************