அஃறிணை வினைமுற்றின் தொகை
 
  

220.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.
 

என் - எனின்,  மேல்  விரித்தனவற்றை எல்லாம் தொகுத்து, இன்ன
திணைக்குரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ - ள்.) பன்மையும்   ஒருமையும் ஆகிய பால்களை யறிய வந்த
அவ்ஆறும் அஃறிணையுடையன, (எ - று.)
  

ஆறாவன, அகர   ஆகார  வக்ரங்களும்,  தகர  றகர  டகரங்களை
யூர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க.
  

ஒன்றென  முடித்தலென்பதனான்   இவ்வீறு   பெயர்க்கும்  ஈறாதல்
கொள்க.
                                                (20)

******************************************************************