என் - எனின், மேல் விரித்தனவற்றை எல்லாம் தொகுத்து, இன்ன திணைக்குரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை யறிய வந்த அவ்ஆறும் அஃறிணையுடையன, (எ - று.) ஆறாவன, அகர ஆகார வக்ரங்களும், தகர றகர டகரங்களை யூர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க. ஒன்றென முடித்தலென்பதனான் இவ்வீறு பெயர்க்கும் ஈறாதல் கொள்க. (20) |