என் - எனின் செயற்கைப்பொருண்மேல் மரபு இலக்கணம் வழாமற் சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செயற்கையாகிய பொருளை ஆக்கம் என்னும் வாய்பாட்டோடு சொல்லுக, (எ - று.) (எ - டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும். மேற்கூறிய ‘இற்றெனக் கிளத்தல்’ (கிளவி-19) இதற்கு அதிகாரத் தான் வருவித்துக்கொள்க. (20) |