என் - எனின், அக்கூறப்பட்ட எச்சங்களுள் முதற்கணின்ற மூன்றற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறப்பட்ட வினையெச்ச வாய்பாடுகளுள் முதற்கண் எடுத்தோதப்பட்ட செய்து, செய்யூ, செய்பு என்னும் மூன்றும் அவ்வெச்சவினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையை யுணர்த்துஞ் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும், (எ -று.) (எ - டு.) உண்டுவந்தான், உண்ணூஉ வந்தான், உண்குபு வந்தான் எனவரும். செய்தெனெச்சத்தின் குறிப்பாகிய இன்றி, அன்றி யென்பனவும் ‘தம்மின் றமையா நந்நயந் தருளி’ (நற்-1) எனவும், ‘தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்’ (கலி-19), எனவும் வினைமுதல் வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க. (32) |