என் - எனின் மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய ஆக்கச் சொற்றானே காரணச் சொல்லை முன்னாகவுடைத்து (எ - று.) (எ - டு.) கடுவுங் கைபிழியெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின, எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால்யாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின எனவரும். ஆக்கம் முற்கூறிக் காரணம் பிற்கூறியும் வருமாலெனின் பெரும்பான்மையும் முற்கூறிக் கூறப்படுதலின் முதற்று என்றார்போலும். இனி முதல் என்பதனைக் காரணமாக்கிக் கூறுதலுமொன்று. (21) |