இயற்கையிலும் தெளிவிலும் காலம் மயங்கல்
 

247. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை.
 

என்     -  எனின்,  இயற்கை  தெளிவு   என்னும்   பொருட்கண்
எதிர்காலம்,   இறந்தகாலத்தோடும்   நிகழ்காலத்தோடும்   மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  வாராக்காலமாகிய      எதிர்காலத்துப்       பிறக்கும்
வினைச்சொல்லாகிய    சொல்லின்    பொருண்மை      இறப்புக்காலச்
சொல்லானும்  நிகழ்காலச்   சொல்லானம்   மிகத்  தோன்றும்;  யாண்டு
எனின்,    ஒன்றனது   இயற்கையினையும்   ஒன்றனது  தெளிவினையும்
ஒருவன் சொல்லுங்காலத்து, (எ -று.)

இயற்கை  என்பது,   வழங்குங்கால்   தான்   ஒன்றனை   இஃது
இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு, (எ - று.)

தெளிவு என்பது, ஒரு நூல்நெறியான்  இது  நிகழும்  எனக் கண்டு
வைத்துத் துணிதல், (எ - று.)

(எ - டு.) இக்காட்டுள்போகின்  கூறை   கோட்படுவன்    என்னாது
இக்காட்டில்    புகின்    கூறை   கோட்பட்டான்   எனவும்,    கூறை
கோட்படுகிறான் எனவும் கூறுதல் ; இஃது இயற்கை.

எறும்பு  முட்டைகொண்டு   தெற்றி   ஏறுவது    கண்டுழி   மழை
பெய்வதாம்   என்னாது  பெய்தது  எனவும்,    பெய்கின்றது   எனவும்
கூறுதல்; இது தெளிவு.

இதுவுஞ் சொல்லொடு சொன்மயக்கம்.                       (47)

******************************************************************