எய்தியது விலக்கல்
 

22.

ஆக்கக் கிளவி காரணம் இன்றியும்
போக்கின் றென்ப வழக்கி னுள்ளே.
 
  

என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறிய  ஆக்கச்  சொற்றான்  காரணத்தை யொழியச்
சொல்லுதலுங்      குற்றமில்லையென்று      சொல்லுப     ஆசிரியர்
வழக்கினிடத்து  என்றவாறு.   உம்மை   யெதிர்மறையாகலான் காரணம்
கொடுத்துக் கூறல் வலியுடைத்து.

(எ - டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும்.

செய்யுள்  விதியுள்வழிச்   செய்யுளென்று   கூறி, வாளாதேயோதுஞ்
சூத்திரமெல்லாம் வழக்கே நோக்குதல்  நூற்கிடையாகலின்  ‘வழக்கினுள்’
என்பது   மிகை;  அதனாற்   செயற்கைப்பொருள்   காரணங்கொடுத்து
ஆக்கங்கொடாதே  சொல்லுதலும்,   காரணமும்  ஆக்கமும்  இரண்டுங்
கொடாதே சொல்லுதலுங் கொள்ளப்படும்.

(எ - டு.) கடுவுங்  கைபிழி  யெண்ணெயும்  பெற்றமையான்  மயிர்
நல்ல எனவும், பைங்கூழ்நல்ல எனவும் வரும்.

எனவே   செயற்கைப்பொருள்  காரணமும் ஆக்கமுங் கொடுத்தலும்,
காரணமொழிய         ஆக்கங்கொடுத்தலும்,         ஆக்கமொழியக்
காரணங்கொடுத்தலும்,  காரணமும்  ஆக்கமும்   இரண்டுங்  கொடாதே
சொல்லுதலும் என நான்குவகைத்து.  இவற்றுள் முன்னையவிதியொன்றும்
மரபிலக்கணம்;   பின்னைய   மூன்றும் மரபுவழுவமைதி.

அவற்றுள்  இச்சுத்திரத்தாற்  கூறியது  பெரும்பான்மை,  இலேசினாற்
கூறிய  இரண்டுஞ்  சிறுபான்மை யென உணர்க.  இவை  யமைவதற்குக்
காரணம் உணர்வா ருணர்வுவகைபற்றிப்போலும்.                 (22)

******************************************************************