‘மன்’ என்னுஞ் சொல்
 

254.

கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்(று)
அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே.
 

என்  -   எனின்,   இது  தத்தங்குறிப்பிற்  பொருள்செய்குறவற்றுள்
ஒன்றன் பொருட்பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ -  ள்.)  கழிவுப்    பொருண்மைக்கண்     வரும்    மன்னும்,
ஆக்கப்பொருண்மைக்கண்  வரும்  மன்னும்,   ஒழியிசைப்பொருண்மைக்
கண்வரும்  மன்னும்  என   மூன்று   கூற்றதாம்  என்ப மன்னென்னும்
சொல்லாது பொருட்பாகுபாட்டு வேற்றுமை, (எ - று.)

இவ்வாறு   பொருளுணர்த்தலும்    அவ்விடைச்    சொற்காவதோர்
இலக்கணம் என்பது. அவ்விதாரணம் உரையிற் கொள்ளப்படும்.

(எ - டு.) ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’     (புறம். 235)

இது கழிவு.

பண்டு     காடுமன் ; இஃது   ஆக்கம். பண்டு காடு என்பதன்றோ
இன்றுநாடு  என்று  ஆக்கமணர்த்துகின்றது  எனின், அதன் பொருளை
இதுவுங் கூடிநின்று உணர்த்திற்று என உணர்க.

பண்டு  கூரியதோர்  வாண்மன் ;  இஃது ஒழியிசை. இன்றோர் குறை
பாடுடைத்தாயிற்று   என்னுஞ்   சொல்    ஒழிந்தமை    தோற்றுவித்து
நின்றமை காண்க.                                          (4)

******************************************************************