‘தில்’ என்னுஞ் சொல்
 

255. விழைவே காலம் ஒழியிசைச் கிளவியென்(று)
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ -  ள்.)  விழைவின்  கண்ணதும்,    காலத்தின்    கண்ணதும்,
ஒழியிசைக்கண்ணதும்  என  மூன்று  கூற்றதாம் என்ப  ‘தில்’  என்னும்
இடைச்சொல்.

(எ - டு.)  “வார்ந்திலங்கு  வையெயிற்றுச்  சின்மொழி, யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே” (குறுந் - 14) இது விழைவு.

“பெற்றாங் கறிகதில்  லம்மஇவ்  வூரே”  என்பது  காலம். “வருகதில்
அம்மவெஞ்சேரி சேர” என்பது ஒழியிசை.                       (5)

******************************************************************