என் - எனின், இதுவும் அது. (இ - ள்.) அச்சத்தின்கண்ணும், பயனின்மைக்கண்ணும், காலத்தின்கண்ணும், பெருமைக்கண்ணும் என அக்கூறு நான்காம் கொன்னைச் சொல், (எ - று.) (எ - டு.) ‘கொள்முனையிரவூர்’ (குறுந் - 91) என்பது அச்சம். கொன்னே வந்தான் என்பது பயனின்மை. “கொன்வரல்வாடை நினதெனக்கொண்டேனோ” என்பது காலம். ‘கொன்னூர் துஞ்சினும் (குறுந் - 138) என்பது பெருமை. (6) |