என் - எனின் இடம்பற்றி நிகழுஞ் சொற்களுட் சிலவற்றிற்கு இலக்கணங்கூறுவான், அச்சொற்களது இடங்களது பெயரும் முறையுங் கூறியமுகத்தான் அவற்றிக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) செலவுப் பொருண்மைக்கண்ணும், வரவுப் பொருண்மைக்கண்ணும், தரவுப் பொருண்மைக்கண்ணும், கொடைப் பொருண்மைக்கண்ணும், நிலைபெற்றுத் தோன்றுகின்ற செலவு, வரவு, தரவு, கொடையென்ற நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கையென்று சொல்லுப்பட்ட அம்மூன்றிடத்திற்கும் பொதுவகையான் உரிய, (எ - று.) (எ - டு.) சிறப்புவகையாற் கூறும்வழிக் காட்டுதும். (28)
1 இது முதல் மூன்று நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் தெய்வச்சிலையார். |