என் - எனின் மேற்கூறிய சொற்களுள் சிலவற்றிக்குச் சிறப்பு வகையான் இட இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறப்பட்ட நான்கு சொல்லுள்ளும், தரும் வரும் என்னுஞ் சொல்லிரண்டும் தன்மை முன்னிலைக்கும் ஆம்; படர்க்கைக்கு ஆகாது, (எ - று.) (எ - டு.) எனக்குத் தருங் காணம். நினக்கு வருங் காணம் எனவரும். |