அறியாப் பொருள்மேல் வரும்சொற்கள்
 

31.

யாதெவ னென்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.

என் - எனின்  உலகத்துப்  பொருள்தான்  அறிந்த பொருளென்றும்,
அறியாப்பொருளென்றும்  இரண்டு  வகைத்து.   அவற்றுள்,   அறியாப்
பொருண்மேல் நிகழுஞ் சொல்லது இலக்கணங் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.)  யாது   எவன்   என்று   சொல்லப்படும்  அவ்விரண்டு
சொல்லும் தன்னான் அறியப்படாத  பொருளிடத்து  வினாச் சொல் லாய்
யாப்புறத்தோன்றும், (எ - று.)

(எ - டு.) நுந்நாடு யாது? இப்பண்டி யுள்ளது எவன்? என வரும்.

இவற்றுள் எவன்  என்பது  இக்காலத்து  ‘என்’  என்றும்,  ‘என்னை’
என்றும் மருவிற்று.

செறிய என்றதனாற்  பிறவும்  அவ்வினாப்  பொருளிடத்து  வருவன
கொள்ளப்படும்.

(எ - டு.) யாவன்,  யாவள்,  யாவர்,  யார், யாவை, யா, எப்பொருள்
என இவை. எவன் என்பது  அஃறிணை  இருபாற்கும்  உரிய இதனானே
யெனினும்  ஒருமைப் பான்மேல்  வருவதே  பெரும்பான்மை  யென்பது
உரையிற் கோடல் என்பதனாற் கொள்ளப்படும்.                (31)

******************************************************************