என் - எனின் இஃது ஒருபொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. மேல் இவையல்லது பயறு இல்லை என்பதனைப்பற்றிப் பிறத்தலான் மேலதற்கே புறனடை யெனினும் அமையும். (இ - ள்.) பொருளோடு பொருந்தாச் சுட்டுப்பெயராயினும் பொருள்வேறுபடாது; ஒரு பொருளேயாகும், (எ - று.) (எ - டு.) இவையல்லது பயறு இல்லை எனவரும். இவை யென்பது பயறே யெனினும் பயறென்பது பின்னுண்மையின் தன்மேற் செல்லாது பிறிதொன்றனைச் சொல்லியதுபோலும் நோக்குடைத்தே யெனினும் அமைக, (எ - று.) இதனாற் சொல்லியது ஒருபொருண்மேல் இருபெயரும் பல பெயருங் கூறுதல் இலக்கணமே யெனினும் இயைபுபடக் கூறவேண்டுமென்று அவ்வழி இயைபில்லது கண்டு அம் மரபுவழுவினை அமைத்தவாறாயிற்று. (37) |