என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று, (இ - ள்.) மூவகைப் பெயர்களுள் சுட்டுப்பெயரை முற்படச் சொல்லுதல் செய்யுளிடத்தாயின் அமையும், (எ - று.) (எ - டு.) “அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன், விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல், பின்னை யதன்கண் விளைவு” என வரும். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது முற்கூறலாகாது என்னப்பட்ட சுட்டுப்பெயர் மொழிமாற்றியும் பொருள்கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவாறாயிற்று. (39) |