என் - எனின் இதுவுஞ் சுட்டுப்பெயர் ஆராய்ச்சியே கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) சுட்டெழுத்தை முதலாகவுடைய காரணப்பொருளை உணரநின்ற சொல்லும் மேற்கூறிய சுட்டுப்பெயர் இயல்பு போலப் பெயரப்பின்னே யாப்புறத் தோன்றும், (எ - று.) (எ - டு.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன் அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டவன் உவக்கும் எனவரும். மேற்கூறிய வகைகளெல்லாம் இதற்கும் ஒக்கும். இதுவும் ஆண்டே யடங்காதோவெனின், ஆண்டுச் சுட்டுப்பொருள் வழி வந்தது, ஈண்டு அப்பொருளது குணத்துவழி வந்தது என உணர்க. (40) |