இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருங்குவரின் அவற்றைச்
சொல்லும் முறைமை
 

41.

சிறப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.

 

என்  -   எனின்     இதுவும்    ஒருபொருண்மேல்    இருபெயர்
வழுக்காத்தலை நுதலிற்று.

(இ - ள்.) சிறப்பினாகிய    பெயர்ச்சொற்கும்    உம்மையாற்   பிற
பெயர்க்கும்  இயற்பெயராகிய  சொல்லை  முற்படச் சொல்லார்; பிற்படச்
சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) ஏனாதி  நல்லுதடன்,  வாயிலான் சாத்தன்,படைத்தலைவன்
கீரன் என இவை சிறப்புப்பெயர்.

பிறவும் என்றது  குலத்தினான்  ஆயபெயரும்,  கல்வியினான்  ஆய
பெயரும், தொழிலினான் ஆயபெயரும், பிறவும் என்பது.

(எ - டு.) சேரமான் சேரலாதன்.  சோழன்  நலங்கிள்ளி, பாண்டியன்
மாறன்:  இவை  குலப்பெயர்.  ஆசிரியன்  சாத்தன்  என்றாற்போல்வன
கல்வியினா  னாகிய  பெயர்.   வண்ணாரச்சாத்தன்,   தச்சக்  கொற்றன்,
நாவிதன் மாறன்: இவை தொழிலினானாகிய பெயர்.

இதனாற் சொல்லியது  ஒருபொருட்கு  இருபெயர்  கூறும்வழி   யாது
முற்கூறினும்  அமையும்  என்று கூறலாகாது.  மேற்றொட்டுங்  கூறிவந்த
மரபானே  கூறாவிடின் அப்பொருண்மேற்  செல்லாது  பிறபொருண்மேல்
நோக்குப்படுமென மரபு வழுவற்க என்றவாறாயிற்று.
              (41)

******************************************************************