வியங்கோள் எண்ணுப்பெயர்
 

45.

வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்.
 

என் -  எனின்  எண்ணிக்கண் திணைவழுவமையுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) வியங்கோட்கண்       எண்ணப்படும்       பெயரைத்
திணைவிராய்வரும் வரவினை நீக்கார்  கொள்வர்  ஆசிரியர், (எ - று.)

(எ - டு.)ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும்.

தன்னினமுடித்தல்   என்பதனான், வியங்கோளல்லாத விரவுவினைக்
கண்ணுஞ்  சிறுபான்மை   வருவன கொள்க. அவை ஆவும்  ஆயனுஞ்
சென்ற கானம் என்பன போல்வன.

இதனாற்    கூறியது  எண்ணின்கண்    திணைபற்றிப்    பிறக்கும்
மரபுவழூஉவமைதி என உணர்க.
                            (45)

******************************************************************