இதுவுமது
 

47.

1எண்ணுங் காலும் அதுவதன் மரபே.
 

என் - எனின் இதுவும் அது.

(இ - ள்.) வேறுவினைப் பொதுச் சொற்களைப் பொதுமையிற் பிரித்து
எண்ணுங்காலத்தும்  ஒன்றன்  வினையாற்கிளவாது  பொது வினையாற்
கிளத்தல் அதற்கிலக்கணம், (எ - று.)

(எ - டு.) யாழுங் குழலும்  பறையும்    இயம்பினார்  எனவரும்.

இதனாற்   சொல்லியது  அப் பொதுச் சொற்களைப் பிரித்தெண்ணும்
வழியும்    வினை    முடிபின்    மரபு      வழுவாமற்    சொல்லுக
என்பதாயிற்று.                                          (47)


1. ‘எண்ணுங் காலை’ என்பது தெய்வச்சிலையார் பாடம்.

******************************************************************