அஃறிணை இருபால் எனல்
  

3.

ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே.

 

என் - எனின்  மேல்   அஃறிணையென்றார்;  அதனை  இனைத்துப்
பால்படுமென்று, அது படும் பால்விரித்தல் நுதலிற்று.

(இ - ள்) ஒன்றனை   யறியுஞ்   சொல்லும்,   பலவற்றை  யறியுஞ்
சொல்லுமென்று             சொல்லப்பட்ட            அவ்விரண்டு
பாலினையுமுணர்த்துஞ்சொல் அஃறிணையன (எ - று.)

இதனாற்  சொல்லியது மேற்கூறிநின்ற  அஃறிணைப் பொருளினையும்,
அஃறிணைச்   சொல்லினையும்    விரிவகையான்    ஒருமை   பன்மை
யெனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல்  எனவும்  இரண்டு  கூறுபடும்
என்பதூஉம் கூறியவாறாயிற்று.                                (3)

******************************************************************