எடுத்த மொழி இனம் செப்பலும் உண்டு என்றல்
 

61.

எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே.
 

என் - எனின், இஃது அருத்தாபத்தி மேற்று.

(இ - ள்.) விதந்தமொழி  தன்னினத்தைக் காட்டி நிற்றலும் உரித்து;
உம்மையால் காட்டாது நிற்றலும் உரித்து, (எ - று.)

(எ - டு.) கீழ்ச்சேரிக் கோழி  அலைத்தது   என்புழி  மேற்சேரிக்
கோழி அலைப்புண்டது   என்பது    சொல்லாமையே    முடிந்ததாம்.
குடங்கொண்டான்  வீழ்ந்தான் எனக் குடம்வீழ்தலும் முடிந்தது. இவை
இனஞ்  செப்பின.  ஆ  வாழ்க,  அந்தணர்  வாழ்க  என்பன இனஞ்
செப்பாதன.

இவையும்     இனம் செப்பின என்னாமோ எனின், சொல்லுவான்
கருத்து அஃதன்மையானும், மறுதலை பல உள்வழி இனஞ் செப்பாமை
யானும் இனஞ்செப்பாவாயின என உணர்க.                   (61)

******************************************************************