தொகைப் பெயரும் பயனிலை கொள்ளும் எனல்
   

68.

பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வும் உரிய அப்பா லான.

 

என் - எனின்,   தனிப்பெயரேயன்றித்   தொகைப்  பெயர்களும்
பயனிலை கொள்ளும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  இரண்டு பெயர்ச்சொன் முதலாக வுளவாகிய தொகைச்
சொற்களும் உள, (எ - று.)

(எ - டு.) யானைக் கோடு உண்டு, செல்க, வீழ்ந்தது, பெரிது பல
என வரும். இவை பெயரினாகிய தொகை.

கொல்யானை உண்டு, செல்க, வீழ்ந்தது, யாது  பெரிது,  பல என
இவை வினையினாகிய தொகை.

தொகையும்     பயனிலை கொள்ளும் என்கின்றமையின் இவையும்
எழுவாயாகற்பால  பிற;  அதற்கு  விதியாதோ  எனின், எச்ச வியலுள்
“எல்லாத் தொகையும்” என்னும் சூத்திரத்துக் கூறப்படும் என்பது.  (6)

******************************************************************