உருபு பெயரது இறுதியில் வரும் எனல்
 

70.

கூறிய முறையின் உருபுநிலை திரியாது
ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப.

என் - எனின்,    உருபேற்றலும்   பெயர்க்கிலக்கணம்   என்பது
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேல் கூறப்பட்ட  முறைமையினிடை  நின்றுவருகிற ஐ
முதலாகிய  உருபும்,  தத்தம்  வாய்பாட்டு  நிலைமையின் வேறா காது
பெயர்க்கீறாய் வரும் இயல்பினையுடைய என்று சொல்லுவர் ஆசிரியர்,
(எ - று.)

(எ - டு.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது,
 சாத்தன்கண் எனவரும்.

1மேல்“கு ஐ ஆன் என வரூஉம் இறுதி” என்று செய்யுட்கண் உரு
பீறுதிரிபு கூறுகின்றார் ஆதலின், அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை
என்றற்கு நிலைதிரியாது எனப்பட்டது என்க.                  (8)


1. வேற்றுமை மயங்கியல், 25 ஆம் நூற்பா.

******************************************************************